images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

Share

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய “சிறீலங்காவின் ஆகப்பெரும் குற்றவாளி” எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா அரச இயந்திரத்துடன் இணைந்து ஒட்டுக்குழுவாக இயங்கியவர் என்றும், தமிழ் மக்களுக்கு எதிரான கொலைகள், கடத்தல்கள், காணாமலாக்கல்கள் மற்றும் வன்புணர்வுகளுக்கு அவரே முதன்மையான பொறுப்பாளி என்றும் சுகாஸ் சாடியுள்ளார்.

“இவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டியவர். இந்தியாவின் சூளைமேடு கொலை வழக்கில் இவருக்கு எதிரான பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

டக்ளஸின் கைது வெறும் கண்துடைப்பாக இருக்கக்கூடாது. அவர் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

தற்போதைய NPP/JVP அரசாங்கம், பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களைக் கைது செய்ததைப் போலவே, இந்தக் கைதையும் ஒரு அரசியல் தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார். கைதானவர்கள் சில வாரங்களில் வெளியே வருவார்களேயானால், அது அந்தந்தக் கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே கருதப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...