12 10
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முரணான கருத்துக்கள்.. அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசு!

Share

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து, தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குழுவின் எந்த உறுப்பினருக்கும் உள் விவாதங்களை ஊடகங்களுக்கு வெளியிட நெறிமுறை உரிமை இல்லை என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் தேசிய நலன்களைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அதை வழங்கியவர்கள் இருவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இந்தியாவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகவோ அல்லது மூளையாகச் செயல்பட்டவர் இந்தியாவுடன் தொடர்புடையவர் என்றோ செயலாளர் ரவி செனவிரத்ன எந்த நேரத்திலும் கூறவில்லை என்பதை ஹேரத் இதன் போது தெளிவுபடுத்தினார்.

எனவே இந்த அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலுவான இராஜதந்திர உறவுகளை சேதப்படுத்தும் நோக்கில், கூறப்பட்ட முற்றிலும் தவறான கதை இது, என்றும் அவர் தமது உரையில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...