11 13
உலகம்செய்திகள்

காசாவில் நிரந்தர அமைதி.. ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

Share

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இரு திசைகளிலும் ரஃபா கடவைத் திறப்பதும் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என கலீல் அல்-ஹய்யா குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளிக்கும் மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்தின் வளர்ச்சியில் முக்கிய தருணங்களில், ட்ரம்பின் தனிப்பட்ட தொடர்பு – ஒரு வலுவான கையாகவும், மென்மையான வழிகாட்டியாகவும் – முக்கிய பங்கு வகித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தின் முதல் கட்டம், போரை நிறுத்தி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்பின் குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒத்துழைப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஹமாஸின் மூத்த தலைவரும் அதனை உறுதிபடுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...