peris
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்பட முடியாது! – மைத்திரிக்கு பதிலடி

Share

“அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணி வேலையை செய்யமுடியாது. அதேபோல ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்படவும் முடியாது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசுக்குள் இருந்துகொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடியும். எனவே, விமர்சனங்களை முன்வைப்பவர்களை விலக்குவதற்கு பதிலாக, தீர்வுகளை வழங்குவதே பொருத்தமான நடவடிக்கையாகும்.” என்று அரச தலைவர் பதவியை வகித்த ஒருவர் (மைத்திரிபால சிறிசேன) விமர்சித்துள்ளார். அவரின் இந்த கருத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது.

விமர்சிக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால் அதற்கு பொருத்தமான இடங்களும் உள்ளன. அரசுக்குள் உள்ள பிரச்சினைகளை நாடாளுமன்றக்குழுக் கூட்டங்கள் மற்றும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டலாம். அல்லது தலைவர்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசலாம். அதனைவிடுத்து பொதுவெளியில் விமர்சிப்பது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...