நாட்டை திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதி தளர்த்துவதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகள் முன்வைக்குமாறு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய சுகாதார, போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளால் இந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு மீள திறக்கப்பட்டாலும் வழங்கப்படவுள்ள சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment