இலங்கைசெய்திகள்

பரிந்துரைகளை முன்வைக்குக! – ஜனாதிபதி

ada
Share

நாட்டை திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதி தளர்த்துவதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகள் முன்வைக்குமாறு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய சுகாதார, போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளால் இந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு மீள திறக்கப்பட்டாலும் வழங்கப்படவுள்ள சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...