12 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதன்கிழமை விடுமுறை ஏன்? – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

Share

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நாளை (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

வாரத்தின் ஏனைய நாட்களை விடுத்து, புதன்கிழமையை விசேட விடுமுறை தினமாகத் தெரிவு செய்தமைக்கான காரணத்தையும் அவர் விளக்கினார். வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அறிவித்து, வெள்ளி முதல் ஞாயிறு வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வழங்குவது அரச அலுவலகப் பணிகள் மற்றும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாரியளவில் பாதிக்கும் என்பதால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

மாறாக, வாரத்தின் நடுப்பகுதியான புதன்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பதன் மூலம், திங்கள் – செவ்வாய் மற்றும் வியாழன் – வெள்ளி ஆகிய நாட்களில் அரச அலுவலகங்களைச் சீராக இயக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் பொதுச் சேவைகள் முழுமையாக முடங்காமல் இருப்பதை உறுதி செய்ய முடிவதோடு, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எரிபொருள் தேவையையும் கணிசமாகக் குறைக்க முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

சர்வதேச ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைக்குத் தயாராகும் ஒரு தற்காலிகத் தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச அலுவலகங்கள் திறக்கப்படும் நாட்களைக் குறைப்பதன் ஊடாக, தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...