7 2
இலங்கைசெய்திகள்

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

Share

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன எடுத்துள்ள முடிவை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டால் முடிவை மாற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “நாங்கள் கட்சியாக தனித்து செல்கிறோம், தனி வேட்பாளரை நிறுத்துகிறோம், ஆனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறோம்.

எங்களுடைய கட்சி எடுத்துள்ள முடிவை மீண்டும் மாற்றுமாறு கேட்டால் நாங்கள் அதனை செய்வோம். வெற்றி என்பதே எங்களுக்கு முக்கியமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், “2015ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பலர் சென்றனர். சில பேருடன் எஞ்சியிருந்தோம். அந்த குழுவுடன் இணைந்து மிகப்பெரிய கட்சியை உருவாக்கி மகிந்த ராஜபக்சதலைமையில் தேர்தலிலும் வெற்றிபெற்றோம்.

இம்முறையும் அதுதான் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுனவின் 19 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகள் இதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அறிவிப்பு விடுக்கப்பட்டபோதிலும் சில பொதுப் பிரதிநிதிகள் இதனைப் புறக்கணித்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஸ்தாபகரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என தெரியவந்தது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...

சேனக்க பல்லேதென்ன
இலங்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக இன்று முதல் அமுலுக்கு...

கொத்மலை
இலங்கை

திறக்கப்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

இன்றைய தினம் மாலை 7.00 மணிக்கு, கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை...

mon
இலங்கை

5,000 மில்லியன் டொலர்களைக் கடந்த வெளிநாட்டு ஊழியர்களின் பணப்பரிமாற்றம்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த...