13 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: 20க்கு20 கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் மகிந்த தேசப்பிரிய

Share

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: 20க்கு20 கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் மகிந்த தேசப்பிரிய

இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதி தேர்தலையும் 20க்கு 20 கிரிக்கெட் போட்டி ஒன்றின் முடிவுகளையும் ஒப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தேர்தல் கண்காணிப்பு குழுவின் உறுப்பினராகவே அவர் ஈடுபட்டுள்ளார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுடன் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் 16ஆவது மற்றும் 20ஆவது ஓவர்களுக்கு இடையிலான முக்கியமான காலகட்டத்தை ஒப்பிட்டுள்ளார்.

இதன்படி, கடைசி ஓவர்களில் யார் சிறப்பாகச் செயல்பட்டார்களோ அவர்களுக்குத்தான் இந்த தேர்தல் சிறப்பானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போட்டியின் முதல் கட்ட பவர் பிளேயில் சிறப்பாக விளையாடுவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...