14 8
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் மற்றுமொரு தோல்வி: வீணடிக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள்

Share

கோட்டாபயவின் மற்றுமொரு தோல்வி: வீணடிக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் நடவடிக்கை காரணமாக, 84 மில்லியன் ரூபாய்கள் வீணடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி வரையில், அரசியல் பாதிப்புக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவுக்காக, 84 மில்லியன் அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான மூவரடங்கிய ஆணையகம், 2020ஆம் ஆண்டு ஜனவரியில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆணையத்தின் நடவடிக்கைகளுக்காக 84 மில்லியன் அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்களை அடுத்து சர்ச்சைக்குரிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...