rtjy 287 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் குழந்தையை பணயம் வைத்து மோசமான சம்பவம்

Share

யாழில் குழந்தையை பணயம் வைத்து மோசமான சம்பவம்

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியில் வீடொன்றில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (29.08.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபா பணம், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று மிரட்டி விட்டு வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திரைப்படங்களில் இடம்பெறுவதை போன்று குழந்தையை பணயம் வைத்து மனிதாபிமானமற்ற முறையில் இவ்வாறானதொரு கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...