COVID 4
இலங்கைசெய்திகள்

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

Share

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டோரில் 5 முதல் 10 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தொற்று ஏற்பட்டு குணமாகி சில வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, உடல்வலி, இருமல், தூக்கமின்மை மற்றும் ஞாபகமறதி போன்ற அறிகுறிகள் பலருக்கு ஏற்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுவோருக்கு அரச மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பிந்தைய கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நீடித்தால் மருத்துவமனைகளின் சுவாசப்பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது – என்றார்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...