lohan
இலங்கைசெய்திகள்

பதவி விலகுகிறார் லொஹான்! – ராஜினாமா கடிதம் கையளிப்பு

Share

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிட வைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

தனது கைத்துப்பாக்கியை காட்டி உங்களை கொலை செல்வேன் என மிரட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் நாட்டில் கடுமையான கண்டனங்களையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதையடுத்து லொஹான் ரத்வத்தவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கட்டளையிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தனது ராஜினாமா கடிதத்தை லொஹான் ரத்வத்த ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

lohab

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...