5675675
இலங்கைசெய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கே மதுபானம்!

Share

வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் தெரிவுசெய்யப்பட்ட சுற்றுலா ஹொட்டல் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் மாத்திரமே மதுபானம் விற்பனை செய்வதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் மற்றும் பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவிக்கையில்,

தனிப்படுத்தல் காலத்தில் ‘பயோ பபிள்’ திட்டத்தின் கீழ் மதுவரித் திணைக்களத்தால் தரப்படுத்தப்பட்டுள்ள ஹொட்டல்களிலேயே சுற்றுலா பயணிகள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறது, குறித்த பயணிகளுக்கே மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய ஹொட்டல்கள் தொடர்பில் ஊரடங்கு காலம் நீங்கியதும் அனுமதியளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கிய பின்னர் சாதாரண மது விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதும், மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களே மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...