மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக கொள்வனவு செய்யப்பட்ட நுழைவுச்சீட்டுகள், நாளை நடைபெறும் மூன்றாவது போட்டிக்கும் செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.
இரண்டாவது போட்டியைப் பார்ப்பதற்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளைப் பெற்ற ரசிகர்கள், அதே சீட்டுகளைப் பயன்படுத்தி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியைப் பார்வையிட முடியும்.
தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நாளை (11) இரவு 7.00 மணிக்கு தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்யுமா அல்லது பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.