AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

Share

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தன்னை விடத் தகுதியானவர் யாருமில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (09) எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ட்ரம்ப் ,

இதுவரை தான் 8 பெரிய போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் சில போர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தவை என்றார்.

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போராக மாறத் தொடங்கியிருந்தது. ஏற்கனவே 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. அந்த இக்கட்டான சூழலில் தலையிட்டு நான் போரை நிறுத்தினேன்” என அவர் உரிமை கோரினார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு வொஷிங்டன் வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அணுசக்தி பலம் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான போரைத் தடுத்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காகத் தனக்கு நன்றி தெரிவித்ததாக ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை விமர்சித்த ட்ரம்ப், “ஒபாமா எதற்காகவும் எதையும் செய்ததில்லை, அவருக்கு ஏன் அந்த விருது வழங்கப்பட்டது என்றே தெரியவில்லை. ஆனால், நான் நிறுத்திய ஒவ்வொரு போருக்கும் ஒரு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...