Matamela Cyril Ramaphosa
அரசியல்இலங்கைசெய்திகள்

அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

Share

இலங்கையுடன் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி மதமெலா சிறில் ரமபோசா (Matamela Cyril Ramaphosa), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா கடந்த காலங்களில் இலங்கையுடனான உறவு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதில் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தும் எனவும் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...