ஊழல், மோசடிகளை வெளிப்படுத்தும் ஊடக சந்திப்பு

WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM

நாட்டின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பெரும் எண்ணிக்கையான கோப்புகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.

அது தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பி. இன்று வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க, அரசியல்பீட உறுப்பினர்கள், முன்னாள் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் வசந்த சமரசிங்க மற்றும் சட்டத்தரணிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜே.வி.பி. தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்குகளில் ‘நாட்டை அழித்த திருடர்கள் மொத்தமாக அம்பலம்’ என்ற தலைப்பின் கீழ் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.

இதன்படி, நாட்டின் பொதுச்சொத்துக்களை பாரியளவில் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பல மோசடிகள், ஊழல்கள் இன்று ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version