10 25
இலங்கைசெய்திகள்

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

Share

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

யாழில் (Jaffna) மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.12.2024) யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு டிப்பர் வாகனம் ஒன்று சென்றுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை (Point Pedro) காவல்துறையினர் வல்லிபுரம் – ஆனைவிழுந்தன் வீதியில் வைத்து நிறுத்துமாறு கோரியபோது அதனை பொருட்படுத்தாமல் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

இதன்போது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி குறித்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கடத்தல் காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...