1 16
இலங்கைசெய்திகள்

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

Share

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

பங்களாதேஷில் (Bangladesh) இடைக்கால ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்குள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷில் எப்போது ஹசீனா (Sheikh Hasina) ஆட்சி கவிழ்ந்ததோ அப்போது முதலே பெரும் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இஸ்கான் துறவியை கூட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேற்கு மியான்மரின் ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள்.

கடந்தாண்டு இந்த இராணுவ குழு மியான்மரில் பல பகுதிகளைக் கைப்பற்றினர். மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களைக் காட்டிலும் அதிக பகுதிகள் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசமே காணப்படுகிறது.

இந்நிலையில் பங்களாதேஷில் தெக்னாப் பிராந்தியத்தில் உள்ள சில பிராந்தியங்களை இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷின் பிரபல செயின் மார்டின் தீவு அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாமும் இருக்கிறது.

இதனால் பங்களாதேஷிற்கு இது ரொம்பவே முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. அது இப்போது ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...