இலங்கைசெய்திகள்

யாழ். – கொழும்பு விமான சேவை மீள ஆரம்பம்

Share
air
Share

நாட்டில் கொரோனாப் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்நாட்டு விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு விமான சேவைகளை சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு முன்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்துக்கு வாராந்தம் இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...