டெங்கு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் 5 வயது சிறுமியைப் பலியெடுத்த ‘டெங்கு’

Share

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி இன்று உயிரிழந்தார்.

உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது 5) என்ற சிறுமியே உயிரிழந்தார்.

சிறுமிக்கு கடந்த 23ஆம் திகதி மாலை காய்ச்சல் இருந்துள்ளது. பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதால் ஓரளவு சுகம் ஏற்பட்டது.

நேற்றுமுன்தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அன்றைய தினம் இரவு சிறுமிக்குக் காய்ச்சலும் வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிறுமி சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது சிறுவர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறை, பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் டெங்குக் காய்ச்சலால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

காய்ச்சல் ஏற்பட்டால் நேடியாக அருகில் உள்ள அரச மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலை – டயகம வீதியில் பேருந்தும் பாடசாலை வேனும் மோதி விபத்து: மாணவர்கள் காயமின்றித் தப்பினர்

தலவாக்கலை – டயகம பிரதான வீதியின் ஹோல்புறூக் நகருக்கு அருகாமையில் இன்று (மே 12) காலை...

world 80
செய்திகள்உலகம்

இளம்பெண்களின் அந்தரங்கத் தேடல்: ஆபாசப் படங்கள் குறித்த வெளிப்படையான பார்வைகள்

பெண்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்களா அல்லது இது ஆண்களுக்கு மட்டுமே உரியதா என்ற விவாதம் தற்போது...

world 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடக்கம்: யாழ்ப்பாணத்தில் நினைவு ஊர்தி பயணம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது, இன்று (மே 12) யாழ்ப்பாணம் நல்லூரில்...

world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க பேராதனை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பீடத்தில் முதுதத்துவமாணி (M.Phil) பயின்று வந்த விரிவுரையாளர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட...