“ராஜபக்சக்கள்தான் இந் நாட்டை சீரழித்தனர். அதே ராஜபக்சக்கள்தான் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. அதனால்தான் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 3 ஆவது நாளாகவும் நடைபெற்ற இடைக்கால வரவு -செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், நாட்டில் முறைமை மாற்றத்துக்காக போராடியவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கும் அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
#SriLankaNews
Leave a comment