Screenshot 2025 12 05 173047
செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்படாத வர்த்தகர்களுக்கும் நிவாரணம்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

Share

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட கடன் திட்டங்கள் மற்றும் நிவாரண பொறிமுறைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

10 ஆவது நாடாளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, ஆனால் இதுவரை பதிவு செய்யப்படாத சிறு வர்த்தகர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வங்கிகளுடன் இணைந்து வர்த்தக சமூகத்திற்கு கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் பதிவு செய்யும் முறையை உருவாக்க வேண்டும்.

அனர்த்தத்திற்குப் பின் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும்போது, அது முன்பிருந்த நிலையை விட மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்தில், செயற்திறனுடன் செலவிட வேண்டும். தவறும் பட்சத்தில் எதிர்பார்க்கும் பொருளாதார இலக்குகளை அடைய முடியாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மீண்டும் தமது வாழ்வாதாரத்தைத் தொடங்குவதுடன், நாட்டின் தேசிய பொருளாதாரப் பொறிமுறைக்குள் முறைசார்ந்த வர்த்தகர்களாக அவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...