katunayake airport
இலங்கைசெய்திகள்

விமான நிலைய துப்பரவு பணியாளருக்கு சன்மானம் வழங்கிய ஜப்பானியர்

Share

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பேராசிரியர் ஒருவரின் பணப்பை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தரையில் விழுந்ததையடுத்து, அவர் அதனை மறந்து சென்றுள்ளார். இந்நிலையில் விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவரால் அந்த பணப்பை எடுக்கப்பட்டு, உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

60 வயதான ஜப்பானிய பேராசிரியை மத்ருஹுர ஜுன்கோ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள கையடக்க தொலைபேசி நிறுவனமொன்றின் அலுவலகத்திற்கு சென்று இலங்கையில் பயன்படுத்துவதற்காக கையடக்க தொலைபேசி சிம்மொன்றை பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது அவரது பணப்பை கீழே விழுந்துள்ளது.

விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர், இந்த பணப்பையை எடுத்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

பணப்பையில் 1,19,390 ரூபாய் இருந்தது மற்றும் பேராசிரியர் பணம் பெற்றதற்கான ரசீது இருந்தது. அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பேராசிரியையை தொடர்பு கொண்டு, விமான நிலையத்திற்கு வந்து பணப்பையை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

பேராசிரியை விமான நிலையத்திற்கு வந்து, பணப்பையை பெற்று, அதை எடுத்த பெண்ணுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெகுமதி அளித்து, பாராட்டி, நன்றி தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...