rtjy 287 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்பு குறித்து அனுர விமர்சனம்

Share

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்பு குறித்து அனுர விமர்சனம்

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் ரீலோட் போன்று பதவி நீடிப்பு செய்யப்படுகிறார் என்று மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக வினவபட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சபாநாயகர், அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற வகையில் அரசியலமைப்பின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கவேண்டும்.

எனினும் கடந்த மாதங்களில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு பதிலாக, தற்போதைய அதிபரின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்கப்படுகிறது.

யாரோ ஒருவர் தங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்வதைப் போன்றே. பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட கடைசி நீடிப்பு அக்டோபர் 9 ஆம் திகதி முடிவடைந்தது.

இந்தநிலையில் அவருக்கு மூன்று வார கால பதவி நீடிப்பை வழங்குவதற்கான மற்றொரு பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றது.

இருப்பினும், அரசியலமைப்பு சபை, அந்த பரிந்துரையை அங்கீகரிக்கவில்லை. எனவே தற்போது இலங்கையின் பொலிஸ் மா அதிபர் யார் என்று அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.

ரீலோட் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், புதிய பொலிஸ் மா அதிபர் யார்? என்று அவர் வினவினார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதமர் தினேஸ் குணவர்த்தன, பொலிஸ் மா அதிபர் தொடர்பாக, ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு இந்த மாத இறுதி வரை சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...