rtjy 233 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நிபா வைரஸ் நோய் தொடர்பில் தகவல்

Share

நிபா வைரஸ் நோய் தொடர்பில் தகவல்

இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவி வரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

பன்றிகள் மூலம் இந்நோய் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், பன்றிகளை மையமாக வைத்து நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்திற்கு சென்று, இந்நாட்டில் கால்நடை உற்பத்தி கைத்தொழில் மற்றும் பொது சுகாதாரத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தபோதே வைத்தியர் ஹேமலி கொத்தலாவல இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், நிபா வைரஸ் இலங்கைக்குள் வராமல் தடுக்க நோய் கண்காணிப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது போன்று நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...