ஊர்காவற்துறை நீதிவான்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் விடுதலை!

Share

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை நீதிவான் ஜெ. கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதுடன் மீனவர்களின் படகொன்று அரசுடமையாக்கப்பட்டது.

இந்திய மீனவர்ளின் ஏனைய 2 படகுகள் தொடர்பான உரிமை கோரல் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களையும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமினூடாக நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் மூன்று சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களே நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி ஒரு படகுடன் 4 மீனவர்களும், மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஒரு படகுடன் 3 மீனவர்களும், ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி ஒரு படகுடன் 12 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...