jeyshankar
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Share

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். 30 ஆம் திகதிவரை அவர் நாட்டில் தங்கியிருப்பார்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு கடைசியாக 2018 இல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றது. இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வருகின்றார்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளார்.’பிம்ஸ்டெக்’ அமைப்பின் அடுத்த தலைமைப்பொறுப்பை தாய்லாந்தே ஏற்கவுள்ளது. அந்த பதவியை தாய்லாந்து பிரதமர் பொறுப்பேற்பார். ஏனைய நாடுகளின் பிரதமர்கள் ‘காணொளி’ தொழில்நுட்பம் ஊடாகவே மாநாட்டில் பங்கேற்பார்கள்.

அரச தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் மார்ச் 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

அத்துடன், ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு – கலந்துரையாடல் மார்ச் 29 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் மண்டபத்தில் நடைபெறும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 6482c5544cb0e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை! – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிரடி!

நாட்டில் அண்மையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பீல்ட் மார்ஷல்...

images 1 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாகுபாடுகளை ஒழிக்க அரசாங்கம் உறுதி! – மன்னாரில் பெண் தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் ஹரிணி!

இனவாதம் உட்பட அனைத்து வகையான சமூகப் பாகுபாடுகளையும் ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருப்பதாகப் பிரதமர்...

Illegal Weapons 1 724694 850x460 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் அதிரடி: இந்த ஆண்டில் இதுவரை 352 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல்! – காவல்துறை தகவல்!

இலங்கையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின்...

Untitled
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே படுகொலை! – நாட்டின் பாதுகாப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பகல் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, நாட்டின்...