வடக்கு - கிழக்கில் ஒரு மணி நேரத்துக்குள் இந்திய இராணுவம் தரையிறங்கும் நிலை
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் ஒரு மணி நேரத்துக்குள் இந்திய இராணுவம் தரையிறங்கும் நிலை

Share

வடக்கு – கிழக்கில் ஒரு மணி நேரத்துக்குள் இந்திய இராணுவம் தரையிறங்கும் நிலை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி பாலம் அமைக்கப்பட்டால், இந்திய இராணுவம் ஒரு மணி நேரத்துக்குள் இலங்கையை ஆக்கிரமிக்கும் என அரசியல் ஆய்வாளரும், புலனாய்வு செய்தியாளருமான எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கை மீதான சீனாவின் தவிர்க்கமுடியாத காலூன்றலை சமப்படுத்தும் நோக்குடனேயே இந்திய – இலங்கை பால விவகாரம் மோடியினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியானதொரு தரைவழி பாலம் அமைக்கப்பட்டால் இந்திய இராணுவம் ஒருமணி நேரத்துக்குள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்யும்.

எதிர்காலத்தில் சீனா – இந்தியாவுடன் போர்தொடுக்குமாக இருந்தால், அமைதியான முறையில் இந்திய துருப்புக்கள் இலங்கை வருவதற்க்கான சிறந்த வழியாக இது பார்க்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டபோது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இந்தியாவின் நலனை மையப்படுத்தியே அமைந்திருந்தன.

அதில் இந்திய, இலங்கை மீது குறிவைத்த முக்கிய விடயம், “இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தும் திட்டம்”.” என தெரிவித்தார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...