KILINO
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வு!

Share

கிளிநொச்சியில் மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்குளம் , உடுப்பாற்றுக்கண்டல், மற்றும் உப்பாறு ஆகிய பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது என அங்குள்ள விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் பிரதேச செயலாளரின் முயற்சியால் ராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மருதங்குளம் உடுப்பாற்றுக்கண்டல் உப்பாறு போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

எனவே இது  தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...