WhatsApp Image 2022 04 30 at 3.15.45 PM
இலங்கைசெய்திகள்

இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கு உதவுங்கள்! – தமிழக முதலமைச்சரிடம் வடக்கு மீனவர்கள் வேண்டுகோள்

Share

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்தது போல கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் நேற்றைய தினம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால்மா உணவு பொருட்களை வழங்குவதாக அறிவித்ததை நாங்கள் வடக்கு கடற்றொழிலாளர்கள் என்ற ரீதியில் அவரது செயற்பாட்டை நாங்கள் வரவேற்கின்றோம்.

அத்தோடு அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் அதேபோல தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும் அத்தோடு அத்தனை சட்ட சபை உறுப்பினர்களுக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள் ஆகிய
நாங்கள் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றோம்.

தொப்புள் கொடி உறவாக இவ்வாறு நீங்கள் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உணவு பொருட்களை அனுப்பமுன் வந்து இருக்கிறீர்களோ அதே போலத்தான் எங்களது தொப்புள் கொடி உறவாகிய தமிழ்நாட்டு மீனவர்களால் கடந்த பத்து வருடமாக நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். அத்தோடு நாங்கள் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் தமிழக இழுவை மடி தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

நாங்கள் கடந்த பத்து வருடங்களாக இழுவை மடி தொழிலை வடபகுதியில் நிறுத்துமாறு கோரி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டு முதலமைச்சர் நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு நாங்கள் பகிரங்க மடல் கூட அனுப்பி இருந்தோம்.

நீங்கள் அது தொடர்பில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மிகவும் கவலையளிக்கின்றது.நாங்கள் 50 ஆயிரம் குடும்பங்கள் இரண்டு லட்சம் மக்கள் இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்படுகின்றோம். எங்களுடைய தொழில் அழிக்கப்படுகின்றது. வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு முரணான தொழில்முறையால் நாம் அழிக்கப்படுகின்றோம் அது பற்றி நீங்கள் பேசாமல் மௌனம் காத்து இருப்பது இந்த இரண்டு லட்சம் வடபகுதி தொழிலாளர்களுக்கு கவலை அளிக்கின்றது.

நேற்றைய தினம் சட்டசபையில் உணவு பொருட்களை அனுப்புவதற்கு எடுத்த தீர்மானத்தை போல வடக்கு மீனவ தொழிலாளர்களுக்காக இழுவை மடி பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...