Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபயவுக்கு முழு சுதந்திரம் உண்டு!

Share

” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கை வருவதற்கான முழு சுதந்திரம், உரிமை உள்ளது. அந்தவகையில் அவர் விரைவில் நாடு திரும்புவார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டுக்கு வரும் உரிமை கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கின்றது.

அதேவேளை, போராட்டம் என்ற போர்வையில் இடம் பெற்ற சில வன்முறைச்சம்பவங்களை அனுமதிக்க முடியாது. அத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்.

அதேபோல ஊழல்கள் மற்றும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர்களை ஊடகங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவ்வாறு அல்லாமல் அரசியல்வாதி, அரச அதிகாரி என பொதுவாக விளித்தால் அது அனைவருக்கும் களங்கமாக அமையும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...

world 95
செய்திகள்இலங்கைபிராந்தியம்

75 மி.மீ. கனமழை மற்றும் உச்சத்தில் சூரியன்: இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம்!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை...

world 92
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த வாரத்தில் மட்டும் 49 பேர் சாலை விபத்துகளில் பலி: போதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 10 வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம்...

world 94
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தை: முதல் கட்டம் நிறைவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா...