பொது வேலைநிறுத்தம்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று வேலைநிறுத்தம்!

Share

அரசுக்கு எதிராக இன்று பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் நாடளாவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் உட்பட பல நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று கடமைக்குச் செல்லாது தமது விடுமுறையை முறையாக அறிவித்து, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்று சுகவீன விடுமுறையை அறிவித்து இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றன என்று வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்காமல் தன்னிச்சையாக செயற்பட்டுவரும் அரசைப் பதவி விலகக் கோரி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு அனைவரும் வழங்குகின்றன என்று தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகக் கோரி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்துக்குத் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்காக இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையூடாக நேற்றுக் கேட்டுக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...