image b881faba6f
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி முகத்திடல் தாக்குதல் ஐ.நா வில் எதிரொலிக்கும்!

Share

” காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது அரச அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதலானது, செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும்.”

இவ்வாறு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

மனித உரிமைகள் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உறுப்பு நாடுகள் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்விக்கணைகளைத் தொடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

” மேற்படி சம்பவத்துக்கு பல நாடுகளின் தூதரகங்கள் ஏற்கனவே கண்டனத்தை வெளியிட்டுள்ளன. எனவே, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஜெனிவாத் தொடரில் நெருக்கடி நிலை உருவாகும். ” – என அவர் மேலும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...