Power cut
இலங்கைசெய்திகள்

எரிபொருள் பற்றைக்குறை! – மீண்டும் மின்வெட்டு அதிகரிப்பு??

Share

புதிய நாப்தா (எரிபொருள்) விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம், இன்று (03) நள்ளிரவு மூடப்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

இதுவரை நப்தா கிடைக்கவில்லை என்றும் இரவுக்குள் நப்தா கிடைக்கவில்லை எனின், மின்நிலையம் மூடப்படும் என்றும் மின்சாரசபையின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான அன்ட்ரூ நவமணி குறிப்பிட்டுள்ளார்.

4000 மெற்றிக்தொன் நப்தா மூலம் 165 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இன்றிரவுக்கு தேவையான நப்தா காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின்நிலையத்தை மூடும் பட்சத்தில் மின்வெட்டை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் நிலைமையை பரிசீலித்து, மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டுமா என்பதை ஆராயவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...