gotta
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு! – கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

Share

இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன.

தொடர் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், கடந்த 9 ஆம் திகதி மிகப்பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், இரவோடு இரவாக மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

இருப்பினும் அங்கு அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை எனவும், சாதாரண மக்களுக்கு வழங்கப்படுவது போல் 15 நாட்கள் தங்குவதற்கான சாதாரண விசாவே வழங்கப்பட்டுள்ளது எனவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது கோட்டாபய இந்தியா செல்வதற்கான அனுமதியை வழங்கக் கோரி இந்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் எனவும், அந்தக் கோரிக்கையை இந்திய அரசு மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India #SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...