gotta
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு! – கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

Share

இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன.

தொடர் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், கடந்த 9 ஆம் திகதி மிகப்பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், இரவோடு இரவாக மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

இருப்பினும் அங்கு அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை எனவும், சாதாரண மக்களுக்கு வழங்கப்படுவது போல் 15 நாட்கள் தங்குவதற்கான சாதாரண விசாவே வழங்கப்பட்டுள்ளது எனவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது கோட்டாபய இந்தியா செல்வதற்கான அனுமதியை வழங்கக் கோரி இந்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் எனவும், அந்தக் கோரிக்கையை இந்திய அரசு மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India #SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...