mahinda amaraweera 6756
அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திரக்கட்சி காணாமல் போய்விடும்!

Share

” மக்கள் ஆசியுடன் நாடாளுமன்றம் தெரிவான சிரேஷ்ட உறுப்பினர்களை விரட்டினால், எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காணாமல்போய்விடும்.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

கட்சியின் தீர்மானத்தைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட எம்.பிக்களை கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நீக்கியது.

இது தொடர்பில் வினவியபோதே சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வகித்தவரும், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டவருமான மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கட்சியின் முடிவு தொடர்பில் எமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. நான் இன்னமும் சுதந்திரக்கட்சியில்தான் இருக்கின்றேன். வேறு எங்கும் செல்லும் எண்ணம் இல்லை.

சர்வக்கட்சி அரசாங்கம் யோசனையை சுதந்திரக்கட்சியே முன்வைத்தது. எனவே, நாட்டின் நலன்கருதியே நாம் அமைச்சரானோம்.

மக்கள் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவான உறுப்பினர்களை நீக்கினால், சுதந்திரக்கட்சிக்கு எதிர்காலம் இருக்காது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...