koththu
செய்திகள்இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!

Share

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

ப்ரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளன.

இதனால் பாண் உள்ளிட்ட பிற பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...