wholegrains brown rice quinoa 146829 3 scaled
இலங்கைசெய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

Share

சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தகையோடு, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன.

ரோல்ஸ் உட்பட சிற்றுண்டி உணவுகள், கொத்து ரொட்டி, பராட்டா, ப்ரைட் ரயில் மற்றும் சோறு பார்சல் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளது.

ஹோட்டல் உரிமையாளர்கள் தமக்கு தேவையான விதத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கொழும்பில் நாட் கூலிக்கு வேலை செய்பவர்களும், தங்கியிருந்து தொழில் புரிபவர்களும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூவேளையும் உண்பதற்கு நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாவரை செல்கின்றது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கொழும்பில் இருந்த சிலர், வாழ்க்கை சுமை அதிகரிப்பதால் தமது சொந்த ஊர்களை நோக்கி செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....