wholegrains brown rice quinoa 146829 3 scaled
இலங்கைசெய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

Share

சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தகையோடு, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன.

ரோல்ஸ் உட்பட சிற்றுண்டி உணவுகள், கொத்து ரொட்டி, பராட்டா, ப்ரைட் ரயில் மற்றும் சோறு பார்சல் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளது.

ஹோட்டல் உரிமையாளர்கள் தமக்கு தேவையான விதத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கொழும்பில் நாட் கூலிக்கு வேலை செய்பவர்களும், தங்கியிருந்து தொழில் புரிபவர்களும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூவேளையும் உண்பதற்கு நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாவரை செல்கின்றது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கொழும்பில் இருந்த சிலர், வாழ்க்கை சுமை அதிகரிப்பதால் தமது சொந்த ஊர்களை நோக்கி செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...