202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இந்தியாஇலங்கைசெய்திகள்

இன்றும் தமிழக மீனவர்கள் ஐவர் கைது!

Share

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்களும் விசைப்படகொன்றில் கோடியாக்கரை பகுதியில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டவர்கள் எல்லை தாண்டி யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இரு தினங்களில் எல்லை தாண்டிய குற்றத்தின் கீழ் 17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...