கட்டணம் தாமதமானாலும் மின் துண்டிக்கப்படாது!
நாட்டில் மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும், மின்துண்டிப்பு ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக, மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் நிலை மற்றும் தாமதம் ஏற்படினும் மின்சாரம் துண்டிக்கப்படாது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
மக்களின் நலன்கருதியே இலங்கை மின்சார சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது – என்றார்.
Leave a comment