சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்தில் 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவர் என நம்புவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .
இந்தியாவிலிருந்து பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்திய உல்லாசப் பிரியாணிகளுக்காக அதிக வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்.பலாலி விமான நிலையத்தின் மூலம் இந்திய யாத்திரிகர்கள் இலங்கைக்கு வருவதற்கு வாய்ப்புகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டுக்கு தினமும் சுமார் 2000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் அதனை 7000மாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய உல்லாசப் பிரயாணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைக்கும் வகையில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பயணம் ஒன்றை அமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment