5 Tourists
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரம்!

Share

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்தில் 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவர் என நம்புவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .

இந்தியாவிலிருந்து பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்திய உல்லாசப் பிரியாணிகளுக்காக அதிக வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்.பலாலி விமான நிலையத்தின் மூலம் இந்திய யாத்திரிகர்கள் இலங்கைக்கு வருவதற்கு வாய்ப்புகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டுக்கு தினமும் சுமார் 2000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் அதனை 7000மாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய உல்லாசப் பிரயாணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைக்கும் வகையில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பயணம் ஒன்றை அமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...