kar
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்! – சர்வதேசத்தை நாடுகிறார் பேராயர்

Share

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடுவதைப் போன்று தோன்றுவதாக கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சூம் தொழில்நுட்பம் மூலமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில்  அவர் கருத்து தெரிவிக்கையில்,

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பில்
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முனி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகின்றோம். இதுதொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை மட்டுமன்றி தனக்கு தொடர்புள்ள சக்தி வாய்ந்த நாடுகளிடமும் உதவியை நாடவுள்ளதாக கொழும்பு பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய குண்டுவெடிப்பில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடிவருவது தெளிவாகத் தெரிகிறது.இச் சம்பவத்தை பொலிஸார் கைகழுவி விட முயற்சித்தனர். அப்படி நடக்க அனுமதிக்க முடியாது.

இதுதொடர்பான விசாரணை முடிவதற்குள் நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் அதே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக தனது கூட்டாளிகள் மூவர் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவார்கள். இம்மாத இறுதியில் இருந்து அதனை நேரடியாக கையாள்வதற்கான வாய்ப்பு அந்த அமைப்புக்கு இருக்கும்.  இது நீதிக்கான தேடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...