Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

Share

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை – சேருவில பகுதிக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து நிவாரணம் வழங்குவது அநீதியானது. பாதிக்கப்பட்ட முழு நாட்டு மக்களுக்கும் பாகுபாடின்றி உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கம் தற்போது பின்பற்றும் சுற்றுநிரூபங்களின்படி நிவாரணம் வழங்கினால், பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதமானவர்களுக்குக் கூட உதவி கிடைக்காது. எனவே, அரசாங்கம் உணர்வுபூர்வமாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் செயல்பட வேண்டும்.

கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் மற்றும் விகாரைகள் மூலம் பெறப்படும் நேரடித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நிவாரணங்களை விநியோகிக்க வேண்டும்.

மக்கள் வெறும் உணவுப் பொதிகளை மட்டும் எதிர்பார்க்கவில்லை; இழந்த வாழ்வாதாரத்தை மீட்கவே விரும்புகிறார்கள். குறிப்பாக, மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிகளில் வீடுகள் சேதமடையாவிட்டாலும், கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மறைமுகப் பாதிப்புகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் அசமந்தப்போக்கைக் கைவிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தொழில்களைத் தொடங்கத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...