இரட்டைக் குடியுரிமை
அரசியல்இலங்கைசெய்திகள்

பத்து எம்.பிக்களுக்கு இரட்டைக் குடியுரிமை!

Share

இரட்டைக் குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்.பி. பதவியை வகிக்கின்றனர் என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேறினால் அந்த 10 பேரும் எம்.பி. பதவியை இழக்க நேரிடும் எனத் தெரியவருகின்றது.

21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள ‘இரட்டைக் குடியுரிமை தடை’ என்ற ஏற்பாட்டை நீக்கிக்கொள்வதற்கு இவர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்படி 10 பேரில் மலையக அரசியல்வாதி ஒருவரும் உள்ளடங்குகின்றார். எனினும், வீசா இன்றி இந்தியாவுக்குச் செல்வதற்கான ஓர் ஏற்பாட்டையே அவர் வைத்துள்ளார் எனவும், அது இரட்டைக் குடியுரிமை அல்ல எனவும் தெரியவருகின்றது.

எனவே, 21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால்கூட அவரின் பதவிக்குச் சிக்கல் ஏற்படாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...