IMG 20221012 WA0005
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுழற்சி முறைக் கடன் திட்டத்திற்கு நிதி அன்பளிப்பு!

Share

யாழ்ப்பாணம் தாவடி வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறைக்கடன் வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் ஒரு தொகை நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தாவடி வடக்கில் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரவதனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடா முக்கியஸ்த்தர் கே.கந்தசாமியின் நிதிப்பங்களிப்பில் மாதர் அபிவிருத்திச்சங்க நிர்வாகிகளிடம் குறித்த நிதி கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்ஷன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஊடக இணைப்பாளர் இ.தயாபரன் மற்றும் முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு நிதியினை வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் கடந்த க.பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3ஏ சித்தி பெற்ற மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி காந்தராசா நந்தாயினிக்கு அவரது பெறுபேற்றை பாராட்டி கே.கந்தசாமியினால் ரூபா இருபதாயிரம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட உரை: இன்று இரவு நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து...

17 16
செய்திகள்இந்தியா

விஜய் குறித்து விமர்சனம்: தவெக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது ஜூலி பரபரப்பு புகார்!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர்...

16 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதன்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்: அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய மின்சக்தி மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும்...

15 16
செய்திகள்உலகம்

இலங்கை கடற்பரப்பில் பலியான 84 ஈரானிய வீரர்கள்: தெஹ்ரானில் மாபெரும் இறுதிச் சடங்கிற்கு ஜனாதிபதி அழைப்பு!

இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் அமெரிக்க கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் இறுதிச்...