tamilni 381 scaled
இலங்கைசெய்திகள்

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தகவல்

Share

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தகவல்

இலங்கையில் மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி உயர்கல்வி மற்றும் வேறும் காரணங்களுக்காக இலங்கை மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கற்கை நெறிகளுக்காக அல்லது வேறு தேவைகளுக்காக செல்லும் மருத்துவர்கள் நாடு திரும்பாதிருக்கும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு மருத்துவ பயிற்சிகளுக்காக சென்ற மருத்துவர்கள் பயிற்சி முடித்துக் கொண்டு நாடு திரும்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு மருத்துவர்கள் செல்வதனை மேலும் குறைத்துக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினாலும் வரி அறவீட்டு கொள்கைகளினாலும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் நாட்டை வெளியேறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...

Retirement
இலங்கை

ஓய்வு வயது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

  ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதோடு,...