imf 1
இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பம்

Share

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் அந் நாடுகள் பங்குபற்றிய வேளையில் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கும் அதன் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

இலங்கையின் நீண்டகால நண்பன் என்ற வகையில், இந்தியா முதலில் கடன் மறுசீரமைப்பில் ஆர்வம் காட்டியதாகவும், எதிர்பாராத பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு ஆதரவளித்ததாகவும் இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, இலங்கையின் நெருக்கடியிலிருந்து விரைவில் மீள்வதற்கு விரைவான தீர்வு தேவை எனத் தெரிவித்தார்.

அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் கலந்துரையாடல்களில் பங்கேற்று, முதல் மதிப்பாய்வுக்கு முன்னதாக செயல்முறையை முடிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதில் இருதரப்புக் கடன் வழங்கும் நாடுகளின் விரைவான முன்னேற்றத்தை இது குறிக்கும் என்று ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக செய்தியாளர் சந்திப்பில் உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....