parli 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோப், கோபா குழுத் தலைவர் பதவி தொடர்பில் விவாதம்!

Share

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்குப் புறம்பாக கோப் மற்றும் கோபா குழுத் தலைவர் பதவிகளுக்கு எம்.பி.க்களை நியமிக்கும் முன்மொழிவு குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் நேற்று ஆட்சேபனைகள் எழுந்தன.

இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களின் பெயர்கள் தலைவர் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டதாகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் திரு காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களால் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்புடைய இரண்டு குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குவதாக சபாநாயகர் உறுதியளித்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

அது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், அன்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி செயற்படுமாறும் சபாநாயகரிடம் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...